
கவிப்பேரரசு வைரமுத்து கொழுத்து திரண்டு நிற்கும் ஒரு கறவை பசு. அவரிடன் இலக்கியப் பாலையும் தமிழ் பாலையும் கறக்காமல் வெறும் நுகர்ந்து பார்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.. கலைஞரிடன் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை, உங்களுக்கு பிடித்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், உங்கள் காலை உணவு என்ன - என்று பல கேள்விகள் இதே ரகம். இதையும் தாண்டி ஒருசில புத்திசாலித்தனமான வினாக்களும் உண்டு -
நெள எழுத்தில் தொடங்கும் சொல் உண்டா? (நெள என்றல் மரக்கலம், நெளவி என்றல் மான் என்கிறார் கவிஞர்)
பாரதி காலத்திலேயே அவரை விமர்சித்தவர்?
காந்திக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை?
மரணத்துக்குப்பின் வாழ்வு?
படைப்பாளிகள் பதிலளிக்க கடமைப்பட்டவர்களா? .. இப்படி சில..
வைரமுத்துவின் தமிழ் ஆளுமையும் புலமையும் சேர்ந்து புத்தகத்துக்கு சுவை கூட்டுகிறது. பல் தேய்ப்பது எப்படி என்ற கேள்விக்குக்கூட பல விளக்கங்களுடன் ரசனையோடு பதிலளித்திருக்கிறார். காலை நடைபயிற்சிக்கு முக்கியமானது எது, ரோடு போடுவது எப்படி, நிலா எப்படி தோன்றியது என்ற கேள்விகளின் பதில்கள் ரசிக்கத்தக்கவை.
வைரமுத்து வாசகர்களின் கேள்விகளைக் கொண்டு இந்தப் பாற்கடலை கடைந்திருக்கிறார்... இதில் அமுது மட்டுமே வழிந்தோடுகிறது.