Friday, November 28, 2008

வி.பி.சிங்...

மும்பை வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவில் இந்தியாவின் ஒரு உண்மையான, ஊழலற்ற அரசியல்வாதி மறைந்துபோன செய்தி ஊடகங்களில் அதிகம் இடம் பிடிக்கவில்லை.

பிரதமர் பதவியோடு பல பதவிகளை வகித்த வி.பி.சிங் பெயர் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும், குதிரை பேரத்திலும், ஆட்சி கவிழ்ப்பிலும், தரமற்ற அரசியலிலும் இடம் பெற்றதில்லை. பிராந்திய அடையாளங்கள் இல்லாமல், மத-இன உணர்வுகள் இல்லாமல், இந்தியாவை ஒரு தேசிய கண்ணோட்டத்தில் பார்த்த பிரதமர்களில் வி.பி.சிங் ஒருவர்.

உ.பி முதலமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட நாட்களுக்குள் சாம்பல் கொள்ளையர்களை அடக்குவேன் என்று சபதமிட்டு அது நடக்காமல் போனதும் பதவியை துறந்தவர்..!

காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ராணுவ அமைச்சராக இருந்தபோதும் fairfax, bofors முறையீடுகளை எந்தவொரு சமாதானத்திற்கும் இடம்கொடுக்காமல் வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர்..! காங்கிரஸ் ஆட்சிக்கு நிதிஉதவி செய்துவந்த அம்பானி அமிதாப் போன்றவர்களிடம் வருமானவரி சோதனை நடத்திய நடுநிலையாளர்..!

பிரசார் பாரதி அறிக்கை முலம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைக்கு விதை ஊன்றியவர்..!

இரு துருவங்களான கம்யூனிஸ்டுகளையும் ப.ஜா.காவையும் ஒரே அலைவரிசையில் இணைத்த சாதனையாளர். அதே சமயம், கூடவந்தவர்களின் கூட்டணி அரசியலையும், காங்கிரஸின் காலைவாரும் அரசியலையும், பா.ஜா.காவின் காவி அரசியலையும் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப் போனவர்..! சந்திரசேகர் - ராஜீவ் காந்தி - அத்வானியின் மும்முனைத் தாக்குதலில் வீழ்ந்து போனவர்.

காங்கிரஸிலேயே நீடித்திருந்தால், ராஜீவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, நரசிம்மராவுக்கு பதிலாக பிரதமராகியிருக்கக் கூடியவர்..!

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டவர்..!

தன்
உடலில் புற்று நோய் தொடங்கியதை அறிந்தவுடன் அரசியலைத் துறந்தவர். கிட்டத்தட்ட பதினேழு வருடமாக புற்று நோயுடன் போராடிய தன்னம்பிகையாளர்..!

கடைசியாக, வாரிசு அரசியலில் நம்பிக்கையில்லாத சொற்ப இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்..!

விஸ்வநாத் பிரதாப் சிங் இந்திய ஜனநாயகத்தின் இலக்கணங்களுக்கு ஏற்ற அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் இந்திய ஜனநாயகத்தைப்போலவே பலர் இவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

3 comments:

Anonymous said...

Im sad to share this news first with Ravi... Good Narration once again

Vijay G S said...

Why did you forget the clash in India due to mandal commission?

Anonymous said...

Mandal Commission clash was arttificially created by congress & BJP.. What is wrong in implementing the recommendations of a commission appointed by the same Govt of India. Then why Parliament is recommending all these commissions?

Post a Comment

உங்கள் கருத்துக்கள்