Sunday, February 28, 2016

திமுக வின் நெகட்டிவ் பிரசாரம்


போன வாரம் முழுக்க தி.மு.க.வின் ஒரு பக்க பேப்பர் விளம்பரங்கள் வைரலாக பரவியது.. எல்லோரையும் பேச வைத்தது, அந்த விதத்தில் அவர்களுக்கு அது வெற்றிதான்..! ஆனால் விளம்பரம் வெற்றி பெற்ற அளவுக்கு அது மக்களை திமுக பக்கம் ஈர்க்கவில்லை...!

'ஆளுங்கட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது இருக்கிறது, அதனால் எங்களுக்கே வோட்டு போடுங்கள்' என்பது காலங்காலமாய் நடக்கும் எதிர்மறை பிரசாரம். தன் சொந்த பலத்தில் இல்லாமல் அடுத்தவர் பலவீனத்தில் வெற்றி பெறுவது என்பது எல்லா தேர்தலிலும் நடக்கிறது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதும் அப்படித்தான்...!  ஒண்ணரை லட்சம் கோடி ஊழல் நடந்தது என்று அதிமுகவுக்கு வாக்களித்தோம்... அது நம்மை இரண்டரை  லட்சம் கோடி கடனில் தள்ளியது. இந்த முறை இதுபோல் நெகட்டிவ் பிரச்சாரம் எடுபடாது. "அவங்க சரியில்லைனுதான் தெரியுமே...! நீங்க என்ன செய்ய போறீங்க..." என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். நாம் செய்த தவறு, போன தேர்தலில் நாம் இப்படி கேட்கவில்லை. 

திமுகவுக்கு இந்த எதிர்மறை விளம்பரங்கள் தேவையில்லை, அதுவும் சினிமா காமெடி வசனங்களையும் பாடல்களையும் வைத்து அவர்கள் கிண்டலடிப்பது, அவர்களின் முதிர்சியற்ற தன்மையையே காட்டுகிறது. ஒரு காலத்தில் தன் அடுக்கு மொழியாலும் தமிழ் ஆளுமையாலும் மக்களை கவர்ந்த ஒரு கட்சி இன்று சினிமா வசனங்களை நம்பியிருப்பது நகைப்புக்குரியது. 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்றெல்லாம் முழங்கியவர்கள் இன்று 'வர்ர்ர்ரும்.. ஆனா வராது.' என்கிறார்கள். 'ஆலுமா டோலுமா' என்று பாடுகிறார்கள். ஸ்டாலின் பேசும்போது வளர்சியப்பற்றி பேசுகிறார்... மதுவிலக்கு , லோக் ஆயுக்தா கொண்டு வருவேன் என்கிறார். தொழில் விவசாய வளர்சி பற்றி பேசுகிறார்.. ஆனால் விளம்பரம் வேறு மாதிரியாக இருக்கிறது. 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் அத்தனை தொகுதிகளுக்கும் சென்று வந்த அவரால் தமிழ்நாட்டின் டாப் 10, அல்லது ஒவ்வொரு மாவட்டத்தின் டாப் 10 தேவைகள் என்னென்ன, அதை நாங்கள் எப்படி நிறைவேற்றுவோம், அதற்கான திட்டங்கள் என்னென்ன  என்றெல்லாம் நேர்மறையாக  விளம்பரப்படுத்த முடியாதா? மக்கள் இதைதான் எதிர்பார்கிறார்கள். 

மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பை அன்புமணி சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறன். 'அன்புமணியாகிய நான்..' என்று அவர் கொடுத்த விளம்பரம் (ஏதோ பதவி ஏற்கும் தொனியில் இருந்தாலும்) நாட்டுக்கு தேவையான விஷயங்களை பேசுகிறது. மதுவிலக்கு, வேளாண்மை புரட்சி பற்றி பேசுகிறது. இது பாசிடிவ் அணுகுமுறை. இந்த அணுகுமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


Wednesday, February 17, 2016

அடுத்தது இலவச காற்று?


இப்போது தமிழக அரசு புதிதாக அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாக 20 லிட்டர் மினரல் வாட்டர் அளிக்கப்படுமாம். பணக்காரர்கள் எல்லாம் சுலபமாக காசு கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி விடுகிறார்களாம், அதனால் ஏழைக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறதாம் அரசு.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அதற்க்குதான் இந்த அரசாங்கம், குடிநீர் வாரியம், மாநகராட்சி எல்லாம் இருக்கிறது. பணக்காரனாய் இருக்கட்டும் ஏழையாக இருக்கட்டும்... குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. அதை சீரான முறையில் விநியோகிக்க லாயக்கில்லாத அரசு அதை பாட்டில்களில் அடைத்து இலவசம் என்று விநியோகிக்கிறது, அதுவும் ஸ்மார்ட் கார்டு மூலமாக... வெட்கக்கேடு...!

வீராணம் திட்டம் என்னவாயிற்று? கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என்னவாயிற்று? இவையெல்லாம் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது. மினரல் வாட்டர் கொடுப்பதன் மூலம் மாநகராட்சி குடிநீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத தண்ணீர் என்று அரசே சொல்கிறது. சென்னையில் இவ்வளவு வெள்ளம் வந்தும் அதையெல்லாம் சேமிக்கக எங்களுக்கு தகுதியில்லை என்கிறது.

அடுத்த அம்மா திட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்றே தெரியவில்லை... உங்களது சுவாசமே 'அம்மா'வாக இருக்க வேண்டும் என்று 'இலவச காற்று' திட்டம் எதாவது அறிவிப்பார்களோ?

Sunday, February 7, 2016

'கெத்து'க்காக ஒரு கூத்து



ஒருவழியாக 'கெத்து' என்பது தமிழ்தான் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. பல தரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, திருப்புகழ், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களை அலசி ஆய்வு செய்து இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'கெத்து' என்ற திரைப்படம் தமிழா இல்லையா என்பதை கண்டுபிடிபதற்காக  நடந்த கூத்து இது.

கடந்த தி.மு.க ஆட்சியில், தமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்ததால் வரிவிலக்கு என்று அறிவித்தார் கருணாநிதி. உடனே திரையுலகம் திரண்டுபோய் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சென்னை மாநகராட்சி, கடைகளின் பெயர் தமிழில் எழுதப்பட வேண்டும், பெயர் மட்டுமில்லாமல் அது என்ன கடை என்பதையும் தமிழில் இருக்க வேண்டும் என்று ஆணை பிறபித்தது. (அதாவது மெடிக்கல் ஷாப் என்பது மருந்தகம் என்றும் ஜெராக்ஸ் ஷாப் நகலகம் என்றும் இருக்க வேண்டும்). இல்லையென்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அதாவது தமிழ் தலைப்புக்காக ஒரு துறையினருக்கு மட்டும் சலுகை மற்றொரு துறையினருக்கு தண்டனை  என்ற விசித்திரமான கொள்கையை கடைபிடித்தது. தமிழில் பெயர் வைக்காவிட்டால் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட அந்த அரசுக்கு தைரியம் இல்லை.

சென்னையில் கடைகளில் பெயர்கள் அழகூட்டு நிலையம் (பியுட்டி பார்லர்), அடுமனை (பேக்கிரி),  நொறுவைகள் (ஸ்நாக்ஸ்) என்றல்லாம் மாறின, இதற்க்கு மாநகராட்சியும் பல யோசனைகளை சொன்னது. ஆனால் சினிமா பெயரில் பல குளறுபடிகள். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சினிமா தலைப்பாக இருந்தாலும் வரிவிலக்கு என்றது. இதன்படி 'நிக்காலோவ் ப்ரஷ்னொவொச்கி' என்று ஒரு தமிழ்ப்படம் வந்தாலும் வரிவிலக்கு  உண்டு. 'சந்தோஷ்' என்று ஒரு படம் இருந்தால் வரிவிலக்கு, 'சந்தோஷம்' என்றால் கிடையாது (சந்தோஷம் என்பது வடமொழிச் சொல்).

அடுத்தது அதிமுக ஆட்சி வந்தது. திமுக எதை செய்தாலும் அதை மாற்றவேண்டும் என்ற 'அம்மா அரசியல் சாசனத்தின்' படி தமிழ் பெயரோடு 'U' சர்டிபிகேட் வழங்கப்பட்ட திரைப்படங்களுக்குதான் வரிவிலக்கு என்றார் ஜெயலலிதா. கூடுதலாக, கதையின் கரு தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்,  வசனங்கள் தமிழில் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார். தமிழ் கலாச்சாரம் என்ன என்பதற்கெல்லாம் ஒரு வரையறையே கிடையாது. இதுவரை விலக்கு வாங்கிய எந்த படத்திலும் தமிழ் பண்பாடு இருக்கிறதா என்று ஆராய்ந்தது கிடையாது. 'டங்காமாரி ஊதாரி', 'ஆலுமா டோலுமா' படங்களும், டாஸ்மாக் காட்சிகள் இருக்கின்ற படங்களுக்கும் வரிவிலக்கு கிடைக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச வசங்கள் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் தமிழில் இருந்தால் சலுகை கிடைக்கும். இதுதான் சட்டம்.

இந்த நிலையில்தான் 'கெத்து' தமிழே இல்லை என்று அரசு கத்த, தயாரிப்பாளர்கள் கெத்தாக நீதிமன்றம் ஏற, இந்த வெத்து விஷயத்துக்காக அரசாங்க வக்கீல்கள் வாதாட, நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்ய, இந்த இத்துப்போன சமாச்சாரத்துக்கா இத்தனை கூத்து என மக்கள் பித்து பிடித்து போய் நின்றனர்.

Tuesday, February 2, 2016

படித்ததில் பிடித்தது

நண்பர் ஒருவர் 'வாட்ஸ்அப்' பில் பகிர்ந்து கொண்ட தகவல்.. படித்ததில் பிடித்தது...!
The marketing director of Nescafe manages to arrange a meeting with the Pope at the Vatican.
After receiving the papal blessing, the Nescafe official whispers, 'Your Eminence, I have some business to discuss. We at Nescafe have an offer for you. Nescafe is prepared to donate $100 million to the church . if you change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'."
The Pope looks outraged and thunders, "That is impossible. The Prayer is the word of the Lord, It must not be changed." Well," says the Nescafe man somewhat chastened, "We anticipated your reluctance.
For this reason, and the importance of the Lord's prayer to all Catholics, we will increase our offer to $300 million. All we require is that you change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'."Again, even more sternly, the Pope replies, "That, my son, is impossible. For the prayer is the word of the Lord and it must not be changed."
Finally, the Nescafe director says, "Your Holiness, we at Nescafe respect your adherence to your faith, we realise that tradition is essential to your beliefs, we fully understand the importance of the word of the Lord ............ ....but we do have one final offer.Please discuss it with your cardinals. We will donate $500 million to the great Catholic church if you would only change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'. Please, please consider it." And he leaves.

The next day the Pope convenes the College of Cardinals. "There is some Good news," he announces, "and some bad news .....
The good news is, he continues to a hushed assembly, ' that the Church will get $ 500 million."
"And what is the bad news, your Holiness?" asks a Cardinal.
"Sadly" says the Pope ,.
.
We would have to lose the Britannia Account

Saturday, December 26, 2015

'பீப்' குற்றம்... யார் குற்றம்?


நான் அந்த பீப் பாடலைக் கேட்கவில்லை... ஏதோ நான்கு பேர் இணையத்தில் கேட்ட பாடலை, நான்கு கோடி பேர் கேட்கவைத்த புரட்சியில் நான்கு கோடியே ஒன்றாவது நபராக நான் சேர விரும்பவில்லை..  தேவையில்லாமல் அதைக் கேட்டு கூகுள் தேடலிலும் ஹிட் ரேட்டிலும் முதலாவதாக கொண்டு செல்வதற்கு நான் பங்களிக்கவில்லை.. அனால் அந்த பாடலில் விமர்சனங்களிருந்து அது எவ்வளவு கேவலமான பாடலாக இருக்க முடியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.

இது போன்ற கேவலங்கள் நம் தமிழ் சினிமாவிலும் தொலைகாட்சித் தொடர்களிலும் பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.. என்றைக்கு நம் சினிமாக்களில் பெண்களை உயர்வாக சித்தரிதிருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம்..

" ஃ பிகர் ஃ பிகருதான்... நீ சூப்பர் ஃ பிகருதான்.." என்று 20 வருடங்களுக்கு முன்னரே ரஜினி பாடியபோது யாரும் பெண்களுக்கு எதிரான அவதூறு என்று யாரும் நினைக்கவில்லை... 'டாடி மம்மி வீட்டில் இல்லை..விளையாடுவோமா உள்ள' என்றபோதும், 'அடிடா அவள.. வெட்றா அவள..' என்றபோது யாரும் சலசலக்கவில்லை. தமிழ் சினிமாவில் காமெடி சீன் என்ற பெயரில் பெண்களையும் உறவுகளையும் மிக மிக கீழ்த்தரமாக சித்தரிக்கக்கூடிய அருவருக்கத்தக்க வசனங்கள், காட்சிகள் வந்தபோது யாருக்கும் ரத்தம் கொதிக்கவில்லை..மாறாக அதை தினம் தினம் காமெடி சேனல்களில் குடும்பத்துடன் ரசித்துக்கொண்டிருகிறோம். அமெரிகாவில் பீப் சாங் மாதிரி பாடல்கள் கூட நிறைய வந்திருகிறது.. அனால் நம்மைப்போல அசிங்கமான காமெடி சீன்கள் ஆங்கிலப்படத்தில் வந்ததாக தெரியவில்லை... தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சராம் இவை எதுவுமே அறியாத ஒரு வெளிநாட்டவரிடம் நம் தமிழ் சினிமாவின் காமெடி சீன்களை மட்டும்  போட்டுக்காட்டினால், "உலகிலேயே மிக கீழ்தரமான கலாச்சாரம் இந்த தமிழ் கலாச்சாரம்' என்பார். அவ்வளவு ஆபாசம்.. அவ்வளவு அருவருப்பு..!

ஆனால் இப்போது மட்டும் ஏதோ தீடீரென்று ஞானோதயம் வந்தது போல எல்லாரும் குதிக்கிறார்கள்.. இதுவரை கெடாத கலாச்சாரம் இப்போது கெட்டுவிட்டது என்று புலம்புகிறார்கள்.. இது போன்ற பாடல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான்.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் சிம்பு அனிருத் என்ற இரு நபர்களையும் தனிமைபடுத்தி 'மாட்டினான்டா மன்னாரு' என்பதுபோல அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்.. இதுவரை 'தழைத்தோங்கிய' கலாச்சாரத்தை இந்த இருவர் மட்டும் சீரழித்து விட்டதாக பொருமுகிறார்கள்.. அவர்கள் படத்துக்கு செருப்பு மாலை போடுகிறார்கள்... துடைப்பத்தால் அடிக்கிறார்கள்.. கொடும்பாவி எரிக்கிரார்கள் .. இன்னும் ஒரு படி மேலேபோய் சிலர் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என்கின்றனர்.

யூ டியுபில் வெளியான யாரும் அறியாத ஒரு பாடலினால் 'கலாச்சாரம் கெட்டுவிட்டது' என்றால் உருவபொம்மை எரிப்பதும் செருப்பு மாலை போடுவதும் என்ன மிக உயர்வான கலாச்சாரமா? இந்த வன்முறை கலாச்சாரம்  எந்த பண்பாட்டில் சொல்லப்பட்டிருகிறது? ஒருவன் உருவபொம்மையை எரிப்பது அவனையே எரிப்பதற்கான குறியீடு..ஒருவனை தூக்கில் போடவேண்டும் என்று சொல்லவதற்கு நீங்கள் என்ன நீதிபதிகளா? பல ஆயிரம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவின் உருவபொம்மை எரித்தோம்.. சிம்புவின் உருவபொம்மையும் எரிக்கிறோம்.. பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையில் பயங்கரவாதம் நடத்திய கசாப்பை தூக்கிலிட்டோம். இப்போது சிம்புவையும் தூக்கில் போட வேண்டும் என்கிறோம். இது என்ன உயர்ந்த கலாச்சாரம்? சிம்புவின் பாட்டு, இதுவரை சினிமாவில் இருந்துகொண்டிருந்த ஆபாசங்களின் உச்சம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அனால் இதுவரை எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டது யார் குற்றம்? இதுவரை அதை அமோதித்து ரசித்து பார்த்தது யார் குற்றம்? சிம்புவின் குற்றமா?

இது இப்படியென்றால்... வழக்கம் போல இந்த பிரச்சனையிலும் நம் சட்டம், காவல் துறை எல்லாமே சந்தி சிரிக்கிறது. ஒரே பிரச்சனைக்காக பல நபர்கள் பல ஊர் நீதிமன்றகளிலிருந்து வழக்கு தொடர்வதை சட்டம் எப்படி அனுமதிக்கிறது என்றே புரியவில்லை.. வேண்டுமென்றே ஒருவரை ஊர் ஊராக அலைய விடுவதைத் தவிர வேறு என்ன எண்ணம் இருக்க முடியும்? இதேபோல் பலர் பல காவல் நிலையங்களில் FIR பதிவு செய்கிரார்கள் ... எல்லா சட்ட ஒழுங்கு பிரச்னையும் விட்டு விட்டு நம் காவல் துறை வேறு சிம்புவை கைது செய்வதற்கு 5 தனிப்படை அமைத்திருக்கிறதாம் (?)... இவ்வளவு தனிப்படை அமைத்தும் மூன்று வாரங்களாக சிம்புவையே பிடிக்க முடியாத  இவர்கள்...??  சரி வேண்டாம்...! ஆனால்   "விஷயம் இது இல்லை.. நம் காவல் துறை நினைத்தால் யாரையும் உடனடியாக கைது செய்ய முடியும்.. இந்தப்பாடலை யூடியூபில் அப்லோட் செய்தது யார் என்பதை சில மணிகளில் கண்டுபிடித்து விட முடியும்.. ஆனால் சென்னை மழை விமர்சனங்களை  மறக்கடிக்க பீப் சர்ச்சையை லைம்லைட்டில் வைத்திருக்கிறார்கள்" என்று வரும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை...

இதுவரை நாம் அனுமதித்த, வளர்த்து விட்ட ஆபாசங்களுக்கு ஒத்து ஊதியதுதான் பீப் பாடல்... ஆனால் அசல் 'பீப்'கள் ஒதுங்கிக்கொள்ள ஒத்து ஊதியவன் மாட்டிக்கொண்டான்.

Thursday, December 17, 2015

சென்னை மழை உணர்த்தும் உண்மைகள்



ஒரு மழை எதையெல்லாம் உணர்த முடியும்? இதுவரை உலகில் கொட்டிய மழை என்ன உணர்த்தியதோ தெரியவில்லை... ஆனால் சென்னை பெருமழை பல விஷயங்களை  உணர்த்தியது. செயல்படாத ஒரு அரசாங்கத்தை, மக்கள் கோபத்தை, இளைஞர்களின் எழுச்சியை, சமூக வலைதளங்களின் வலிமையை, சாதி மதம் அற்ற தன்மையை... இன்னும் பல பல...!  இதுவரை அமைதியாக இருந்தவர்கள் எல்லாம் இந்த அரசை தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். மந்திரிகள் காரை மறித்து நியாயம் கேட்கிறார்கள்... கவுன்சிலர்களை அடித்து துரத்துகிறார்கள்.... அரசாங்கம் அரண்டு கிடக்கிறது... மக்களை சந்திக்க அச்சப்படுகிறது. இப்படி ஒரு வீரியத்தை நமக்குள் விதைத்திருக்கிறது சென்னை மழை. ஆனால் இந்த வீரியமும் இந்த எழுச்சியும் இந்த ஒற்றுமையும் நமக்குள் எப்போதும் இருந்திருந்தால் இன்று துளியளவேனும் மக்களைக் கண்டு பயப்படும் அரசு நமக்குக் கிடைத்திருக்கும். ஓரளவுக்கு செயல்படும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கிடைத்திருப்பார்கள். நாம் அதை செய்ய தவறியதால்தான் இப்போது இந்த பாதுகாப்பற்ற நேரங்களை கடந்துகொண்டிருக்கிறோம். நாம் செய்த தவறுதான் என்ன? எல்லாவற்றிக்கும் நாம் சரியான சமயத்தில் சரியான கோணத்தில் கேள்வி கேட்காததே காரணம்.

ஒரு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம்...!

அப்போது  மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் பல விஷயங்களில் சறுக்கிக்கொண்ருந்தது. திமுகவின் ஊழல்கள், இலங்கை பிரச்னையில் அவர்கள் நடந்துகொண்ட விதம், குடும்ப அரசியல் போன்றவை காரசாரமாக விவாதிக்கப்பட்டது ... தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. பல ஊடகங்கள் மூன்று வருடங்களாகவே திமுக அரசை பலமாக எச்சரித்துக்கொண்டிருந்தது. இப்போதுள்ள அளவுக்கு சமூகவலைத்தளங்கள் அப்போது  இல்லாவிட்டாலும் நாமும் நம் பங்குக்கு கடுமையாக அதே சமயம் உண்மையாக விமர்சித்தோம். விளைவு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானித்தோம்.

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த நம்மால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. அதிமுகவை மீண்டும் தேர்ந்தெடுத்தோம். முன்றைய ஆட்சிகளில் தான் செய்த தவறை ஜெயலலிதா மீண்டும் செய்ய மாட்டார் என்று நம்பினோம். அவர் திருந்தி விடுவார் என்று பல ஊடகங்களும் அரசியல் வல்லுனர்களும் ஆருடம் சொன்னர்கள். ஆனால் தான் ஒரு 'புதிய ஜெயலலிதா' என்றெல்லாம் அவர் காட்டிக்கொள்ள கூட விருப்பப்படவில்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது கூட ஒரு எதிர்கட்சித் தலைவராக எந்த கடமையும் செய்யவில்லை.. சட்டசபை செல்லவில்லை.. திமுக பல விஷயங்களில்  தவறு செய்தபோது போராட்டங்கள் என்று எதையும் பெரிதாக நடத்தவில்லை... ஆனாலும் அவரை நம்பினோம்... ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தோம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த விமர்சன வீரியத்தை மறந்து விட்டோம்.   

முதலில் ஆரமித்த குளறுபடி சமச்சீர் கல்வியில்..! பாட புத்தகங்களில் வேண்டாத பக்கங்களில் ஸ்டிக்கர் ஒட்டும்பணி அப்போதே தொடங்கி விட்டது. உரிய நேரத்தில் பாட புத்தகங்கள் போகாமல், எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆசியர்களுக்குத் தெரியாமல், கிட்டத்தட்ட  நான்கு  மாதங்கள் பள்ளிகளில் பாடமே நடைபெறாமல் இருந்தது. இது எவ்ளளவு பெரிய கொடூர செயல்?  இதை தீவிரமாக எதிர்ப்பதற்கோ, இந்த பிரச்னையை தேசிய அளவில்  எடுத்துச் செல்வதற்கோ நாமும் தயாராக இல்லை... ஊடகங்களும் முயற்சி செயவில்லை.. மாணவர்களின் கல்வியையே பாதிக்கும் இந்த விஷயத்தை  வெறும் முணுமுணுப்போடு கடந்து சென்றோம்.

அடுத்து, கடந்தஆட்சியில் கொண்டுவந்த மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம், நிதி நகரம், வானூர்தி மண்டலம், துணை நகர திட்டம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் எல்லாம் முடக்கப்பட்டபோது, 'யாரோ இரண்டு பேருக்குள் நடக்கும் தெருச்சண்டை' என்று கிண்டல் செய்து வசதியாக தப்பித்தோம். இந்த திட்டங்கள் எல்லாம் ஏன் நிறுத்துகிறீர்கள் என்ற நம் கோபத்தை அழுத்தமாக பதிவு செய்யக்கூட நம்மால் முடியவில்லை.      
ஒரு இளம்பெண் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்ட தகவல் தெரிந்ததும் தில்லி போர்க்களமாக மாறியது.. தில்லி மாணவர்கள் பெரும் திரளாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஷீலா தீட்சித் அரசு கவிழ்வதற்கு அதுவே காரணமாக இருந்தது. இது நடந்து சில மாதங்களில் சென்னையில் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு சிறுசேரி அருகே ஒரு புதரில் வீசி எறியப்பட்டாள். சில நாட்கள் கழித்து அழுகிய  பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் தில்லி  மக்கள் போல பொங்கி எழவேண்டாம்... குறைந்த பட்சம் இந்த அரசு பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப்போகிறது என்றாவது விவாதம் செய்திருக்க வேண்டுமே... ம்ஹீம்... யாரோ பெண்ணுக்கு ஏதோ நேர்ந்தால் நமக்கென்ன கவலை என்று மௌனம் காத்தோம். ஜெயலலிதாவும் வழக்கம்போல அந்த அவள் குடும்பத்துக்கு 3 லட்சம் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைத்தார்.

சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்துவது போல தன் மந்திரிகளை மாற்றிக்கொண்டே இருந்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகளில் கல்வி அமைச்சர்கள் நான்கு முறை, தொழில்துறை அமைச்சர்கள் முன்று முறை மாற்றப்பட்டனர்... செல்போன் கூட இயக்கத் தெரியாதவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார். இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்படி கல்வியும் தொழிலும் முன்னேறும் என்று நாம் வெகுண்டு எழவில்லை. ஒவ்வொருமுறை அமைச்சரவை மாறும் போதும் ஏன் என்று நாம் கேட்கவும் இல்லை... முதல்வர் காரணத்தை சொல்லவும் இல்லை.. அமைச்சர் கூட்டம் அதிகாரிகள் கூட்டம் எல்லாம் அடிமைகூட்டமாக மாறியது.

இலவசமாக டிவி கொடுத்த கருணாநிதியை வன்மையாக கண்டித்த நாம், ஜெ ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி,ஆடு, கோழி, லாப்டாப் என்று விரிவைடைந்த போது , 'ஆமாம்.. இந்த கழகங்களே இப்படிதான்.. இலவசங்களைக் கொடுத்து  எல்லாரையும் கெடுக்கறாங்க ...!" என்ற மென்மையான  கருத்துடன் நிறுத்திக்கொண்டோம். 'அம்மா' என்ற சொல் ஏதோ ஒரு கார்ப்ரேட் பிராண்ட் போல தன் எல்லா  திட்டத்துக்கும் ஜெயலலிதா தன் பட்டப்பெயரை வைத்தார் (டாஸ்மாக் தவிர). அம்மா கேன்டீன், அம்மா காய்கறி, அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா மருந்து, என்று பட்டியல் நீண்டுகொண்டே  போனபோது, நாமும் அடுத்து என்ன ரிலீஸ் இருக்கும் என்று ஏதோ புதுப்பட ரிலீஸ் போல ஜாலியாக யூகித்து facebook ல் அரட்டை அடித்தோம். டாஸ்மாக் தவிர எல்லா இடங்களும் அம்மா படத்தை ஒட்டினார்கள். மாணவர்களுடைய பேரூந்து அட்டையைக் கூட விட்டு வைக்கவில்லை. நாம் வாட்ஸ்அப் மிம்ஸ் சை தாண்டி வேறு எதுவம் செய்லவில்லை.


இதற்கு நடுவில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. என் நண்பர் ஒருவர் "அம்மா கேண்டின் செம்ம ஹிட்...!  இட்லி சாம்பார் செம டேஸ்ட் .. இத வெச்சே இந்த முறை அம்மா வோட்டு அள்ளிடுவாங்க பாருங்க...!" என்றார்.. இலவசங்களை கேலி செய்யும் பல படித்த நண்பர்களும் அதை ஆமோதித்தனர். சாம்பார் ருசியை வைத்து இந்தியாவின் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் கூட தள்ளப்பட்டோம்.

ஒன்று, காங்கிரஸ்க்கு க்கு ஒரு மாற்று வேண்டும் என்று பிஜேபி க்கு வோட்டு போடலாம், அல்லது என்ன இருத்தலும் காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை என்று காங்கிரஸ்க்கு வோட்டு போடலாம். இல்லை காங்கிரஸ்சும் வேண்டாம் பிஜேபியும் வேண்டாம் என்று எதாவது ஒரு மூன்றாவது அணிக்கும் வோட்டு போடலாம். அனால் எந்த கூட்டணியிலும் இல்லாத பிராந்திய கட்சியான அதிமுகவுக்கு அமோகமாக ஆதரவு அளித்து  37 உறுபினர்களை (அல்லது 37 அடிமைகளை) பாராளுமன்றத்துக்கு அனுப்பி இந்தியாவின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும்  கொடுத்தது நாம்தான்...!. அனால் அந்த 37 பேர் என்ன ஆனார்கள் என்று நாம் கவலைப்படவில்லை. இப்போது எழும் 'திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம்' என்ற கோஷம் கடந்த சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலிலும் எழவில்லை.


'இந்தியாவிலேயே முதன் முறையாக' என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு பல அசிங்கங்கள் அரங்கேறின. பேருந்திலும் எம்ஜிஆர் சமாதியிலும் இரட்டை இலை சின்னத்தைப் பதித்து விட்டு, அது வெறும் செடிகொடி, குதிரை இறக்கை என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூச்சமே இல்லாமல் வாதாடினார்கள். அது கட்சி சின்னம் போல தோன்றுவதால் தேர்தல் நேரத்திலாவது அதை மறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கண்டித்தத்தை அடுத்து, இலையை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தார்கள். அதிமுக அரசு ஒட்டிய இரண்டாவது ஸ்டிக்கர் அது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஸ்டிக்கர் பிய்த்து எறியப்பட்டது. இடையில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தார். பதவி இழந்தும் தன்னை 'மக்கள் முதல்வர்' என்று அறிவித்துக்கொள்வது, அமைச்சர்கள்  காவடிஎடுத்து, மண்சோறு சாப்பிட்டு சட்டையில்லாமல் மண்ணில் அங்கபிரதக்ஷணம் செய்ததெல்லாம் இதுவரை இந்தியா கண்டிராத ஒன்று. இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகள் எல்லாம் முதல்வராக ஜெ வே நீடித்தார். ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை... ஒரு கோப்பும் நகரவில்லை.. மெட்ரோ ரயில் ஓடவில்லை.. முதலீட்டாளர் மாநாடு நடக்கவில்லை.. எதைப்பற்றியும் யாரும் கவலை கொள்ளவில்லை.. தண்டனை கிடைத்தது ஜெயலலிதாவுக்கா இல்லை மக்களுக்கா என்று நினைக்கும் அளவுக்கு ஒரு மாநில அரசே எட்டு மாத காலம் முழுமையாக ஸ்தம்பித்தது. அமைச்சர்கள்  கோவில் கோவிலாக ஏறி இறங்கியதைத் தவிர  வேறு எதுவும் செய்யவில்லை. நாமும் புரட்சியெல்லாம் ஏதும் செய்யவில்லை... அமைதி காத்தோம்...!

மீண்டும் அதிசயத்திலும் அதிசயமாக எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி ஜெயலலிதா விடுதலை பெற்று முதல்வரானார். உடனே அனைத்து ஊடகங்களும் 'ஜெயலலிதா தன் மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்... இனி அவர் அணுகுமுறையில் பல மாற்றங்கள் இருக்கும்.. இனி அவர் செய்யவேண்டிய டாப் 10 விஷயங்கள்' என்றெல்லாம் எழுதி தள்ளின. இனி ஜெயா அப்படியிருப்பர் இப்படியிருப்பார் என்றெல்லாம் பல வல்லுனர்கள் கணித்தனர்... நாமும் அப்படியே நம்பினோம்... ஆம்... நம்பிக்கொண்டே இருந்தோம்... ஜெயலலிதாவை நாம் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிக்கொண்டே இருந்தோம். தமிழ்நாட்டில் எந்த தலைவரையும்  செய்த தவறுகளை மறந்து நாம் இவ்வளவு தூரம் ஆதரித்துக் கொண்டே இருந்ததில்லை. எல்லோருக்கும் ஒரு அலட்சிய புன்னகையை பரிசாகக் கொடுத்து விட்டு 'அட முட்டாள்களா... நான் என்றைக்கும் அப்படியேதான் இருப்பேன்' என்றபடி தன் வழக்கமான பணிகளை தொடர்ந்தார் ஜெ. டாஸ்மாக் கை மூட வேண்டும் என்று அனைவரும் போராடிய போது சசி பெருமாள் மரணம், கோவன் கைது, மாணவர்களுக்கு அடிதடி போன்றவைகளே நமக்கு பதிலாகக் கிடைத்தது. தன் அரசைப்பற்றி விமர்சனம் செய்த விகடன் மீது வழக்கு தொடர்ந்தார்.

கடைசியாக வந்தது சென்னை பெருவெள்ளம். வெள்ளம் நம் கால்களை தொட்டு நெருப்பாக சுட்டபோதுதான்  இது செயல்படாத அரசு என்பது நமக்கு புரிந்தது. கண் எதிரே நம் உடமைகள் தண்ணீருக்கு இரையாகும் போது மட்டும் தான் நமக்கு கோபம் வந்தது. ஏழை பணக்காரன் என்ற வித்யாசமில்லாமல் உணவுக்கு அலைந்தபோது உணவுப்பொட்டலங்கள் மீது அதிமுக அரசு மூன்றாவது முறை ஸ்டிக்கர் ஒட்டியபோதுதான் நமக்கு ஆணவத்தின் வீரியம் புரிந்தது. அதிகாரம் இல்லாத பொம்மை அமைச்சர்கள், தனிச்சையாக முடிவெடுக்க முடியாத அதிகாரிகள், ராணுவம் -தனியார்-ஊடகங்கள்-சமூக இயக்கங்கள் என்று திரண்ட நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க முடியாத அரசு இவைகள்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்தேறிய அரசாங்க லட்சணத்தின் உச்சகட்டம்

இனியாவது விழித்தெழுவோம்.. நம்மை ஆள்பவர்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவோம். போராட வேண்டிய நேரத்தில் போராடுவோம்.. இனி ஜெயலலிதாவின் பச்சைப் புடவை, கருணாநிதியின் மஞ்சள் சால்வை, விஜயகாந்தின் யோகாசனம்இவையேல்லாம் நமக்கு  தேவையில்லாத விஷயங்கள். சென்னை மழை நமக்கு கொடுத்துள்ள ஒற்றுமையை, ரௌத்திரத்தை, அதிகாரத்தை முறையாக பயன்படுத்துவோம்.


சென்னை மழை நமக்கு பல உண்மைகளை உணர்த்தியுள்ளது. அனால் அதை உணர்த்துகொள்வதற்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம்.


Sunday, November 22, 2015

Are we messengers to political parties...?


When I open my Facebook, Whatsapp atleast one of two posts are either glorifying our Prime Minister or mockery of political leaders, sometime including Modi. It is becoming a trend just to forward messages of your favourite political leaders, defamation of your unfavoured political leaders that goes viral to many many in few minutes. It is easy for everyone just to make a click, but do you think it is a right practice? Is that okay to forward political messages to our known or unknown group of our friends & relatives, topics we hesitate to discuss when we meet them in person?

Look at glorifying the personality cult,

The so called ‘Educated crowd’, who criticised the downtrodden people for their craziness for MGR in Tamilnadu and NTR in Andhra those days, are now adopting the same for Modi. People believed MGR is the super hero, the messiah to save Tamilnadu, who can never go wrong, and started vehemently opposing their critics. They started viewing opposition parties as real villains for their hero and abuse them (off course, the opposition were no less in their part to build their own cult and counterattack). Leader’s strength doesn’t exist in their policies or governance but people’s blind passion with them. I am not commenting anything on MGR or NTR administration here, but I am stressing the point people had lost their sense to think neutrally.  I don’t think any difference now between MGR craziness and Modi craziness, the madness has now shifted from uneducated mass to educated few.

To some extent Rajiv Gandhi enjoyed this, when he became Prime minister in 1984, same evening after Indira Gandhi was assassinated in the morning. That time he was just an MP, not even a cabinet minister, who returned India three years back, was given a position of PM for the world’s biggest democratic country. Not considering him a novice to politics, the sympathy factor and the fact being a young handsome PM, who tours a lot to bring India image, elevated him as the greatest PM of India and one of the important world leaders. Charisma has been built on him as visionary who can lead India to 21st century and people had natural inclination towards him.   Ironically, same set of educated mass who crazily supported Rajiv Gandhi (and Indira’s regime as well) now forwarding messages how congress spoiled the country for 40 years. Other ‘Social media innocence’ Prime Ministers like PV Narasima Rao, Vajpayee & Manmohan Singh are open to credits or critics  only based on their work and policies, who could not build that kind of image.

Engaging the media partner for election campaigns was initiated by Congress during 1989 elections, where Rediffusion, a top most ad agency of India, was placed to promote ‘Brand Congress’ when all the opposition formed National Front. In 2004, BJP government signed with another agency for their ‘India Shining’ campaign. Both campaigns aimed at promoting their political party as saviour of India, but not aimed at individual branding and miserably failed. In 2014, Modi took a different route with social media. He engaged Prashant Kishore, a political strategist who employs professionals from IITs & IIMs along with other top agencies like O&M, Madison world. They all worked together and successfully created ‘Brand Modi’ instead of ‘Brand BJP’. The forceful reflections like ‘Modi is the messiah of India’, ‘India fights second independence’, ‘Modi will emulate Gujarat success’, made people to provide massive mandate to BJP, and of course, also with the help of previous corrupted congress government with their series of scams.

The same Prashant Kishore was hired by Nitish Kumar for recent Bihar elections, which worked against Modi. I read an article in a news magazine that Congress is trying to place him for upcoming UP elections, and DMK is trying their luck for Tamilnadu elections.

BJP now understood the concept of ‘Voters as promoters’ and extended engaging their supporters to keep spreading ‘Brand Modi’ across social media even after elections.  BJP voters are persuaded not to differentiate between liking towards a political leader and promoting the political leader. The indirect motto is  ‘Since you voted for Modi, you need to promote his brand, need to belittle our political opponents, accept whatever he does is best because India has no options’ and identified social media as the best source for it.  I hardly find people in social media who could stand-up and say – “Yes... we definitely wanted change hence voted BJP to power, but doesn’t mean I should keep supporting everything this government does; I stand by my own evaluation”

Here I am definitely not contemplating good or bad about the current government, only claiming we unnecessarily engage in a party’s brand building exercise without being a party member. Appreciating or criticising this government can be issue based, a different subject altogether.

Now look at negative Memes,

This trend cached-up with Tamil nadu politics as well last year, as many political parties created their own ‘Memes Factory’ to revenge their opponents. We also involve ourselves in this tussle, and shamelessly forward these, again based our political prejudice. The nastiest allegations which DMK & ADMK promulgating in the stages last 40 years, are now available in the form of Memes and we share it with all without an iota of embarrassment.  The worst affected in this brawl is Vijayakanth, whose image is totally tarnished.

Here in Tamilnadu, people generally forward messages or memes with poignant and personal criticisms of Modis, Sonias, Rahuls, Karunanidhis, Vijayakanths, Lalus but not Jayalalitha. Doesn’t mean she is not subject to any criticisms, but the fear factor prevents people from pressing the forward button. Many people are arrested for spreading messages against CM in Facebook, Twitter and Whatsapp. We can forward messages that claim Modi as Hindutva terrorist, declare Sonia as Christian patriot, make mockery of Karunanidhi’s family members, craft  Rahul or Vijaykanth as foolish ducks, without any fear, but settle only with mild comments against Jayalalitha. So we work with a very clear mindset – “I can forward any malicious message against someone, I can push my political will to my entire group in social media, not just bothered others may have different political stand, as long as it doesn’t concern my safety”.

Are we just unpaid workers for a political party to spread their messages and memes across? Are we not aware these political parties utilize our gullible mindset for their benefit? Are we really aware where these messages are originating from and we are being trapped to forward? Are you aware you are communicating your biased opinion to thousands of people who may have different political affiliations?  

We have no right to pollute other’s mind with the information that we are not sure of. Allow everyone to think on their own. The worst destiny in this county is likeness towards a political leader goes only with perceptions and not with clear thought process.  If we really want to appreciate or criticise any government policies or political stand, let us write on our own with clear facts and sensible contemplation. Just popularizing our favourite political leader’s image by liking his facebook updates or forwarding memes, will only make us an unpaid cheap worker for them. We are unknowingly losing our self-dignity, which we  keep ridiculing the Dravidian party workers all along – for their flattering, pasting posters, putting flags and flexes in the middle of the road, which we currently do ‘digitally’ sitting at home.


If this trend goes on, we will not be electing any political party in the next election, but only a ‘Best Advertising Agency’.