Sunday, February 28, 2016

திமுக வின் நெகட்டிவ் பிரசாரம்


போன வாரம் முழுக்க தி.மு.க.வின் ஒரு பக்க பேப்பர் விளம்பரங்கள் வைரலாக பரவியது.. எல்லோரையும் பேச வைத்தது, அந்த விதத்தில் அவர்களுக்கு அது வெற்றிதான்..! ஆனால் விளம்பரம் வெற்றி பெற்ற அளவுக்கு அது மக்களை திமுக பக்கம் ஈர்க்கவில்லை...!

'ஆளுங்கட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது இருக்கிறது, அதனால் எங்களுக்கே வோட்டு போடுங்கள்' என்பது காலங்காலமாய் நடக்கும் எதிர்மறை பிரசாரம். தன் சொந்த பலத்தில் இல்லாமல் அடுத்தவர் பலவீனத்தில் வெற்றி பெறுவது என்பது எல்லா தேர்தலிலும் நடக்கிறது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதும் அப்படித்தான்...!  ஒண்ணரை லட்சம் கோடி ஊழல் நடந்தது என்று அதிமுகவுக்கு வாக்களித்தோம்... அது நம்மை இரண்டரை  லட்சம் கோடி கடனில் தள்ளியது. இந்த முறை இதுபோல் நெகட்டிவ் பிரச்சாரம் எடுபடாது. "அவங்க சரியில்லைனுதான் தெரியுமே...! நீங்க என்ன செய்ய போறீங்க..." என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். நாம் செய்த தவறு, போன தேர்தலில் நாம் இப்படி கேட்கவில்லை. 

திமுகவுக்கு இந்த எதிர்மறை விளம்பரங்கள் தேவையில்லை, அதுவும் சினிமா காமெடி வசனங்களையும் பாடல்களையும் வைத்து அவர்கள் கிண்டலடிப்பது, அவர்களின் முதிர்சியற்ற தன்மையையே காட்டுகிறது. ஒரு காலத்தில் தன் அடுக்கு மொழியாலும் தமிழ் ஆளுமையாலும் மக்களை கவர்ந்த ஒரு கட்சி இன்று சினிமா வசனங்களை நம்பியிருப்பது நகைப்புக்குரியது. 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்றெல்லாம் முழங்கியவர்கள் இன்று 'வர்ர்ர்ரும்.. ஆனா வராது.' என்கிறார்கள். 'ஆலுமா டோலுமா' என்று பாடுகிறார்கள். ஸ்டாலின் பேசும்போது வளர்சியப்பற்றி பேசுகிறார்... மதுவிலக்கு , லோக் ஆயுக்தா கொண்டு வருவேன் என்கிறார். தொழில் விவசாய வளர்சி பற்றி பேசுகிறார்.. ஆனால் விளம்பரம் வேறு மாதிரியாக இருக்கிறது. 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் அத்தனை தொகுதிகளுக்கும் சென்று வந்த அவரால் தமிழ்நாட்டின் டாப் 10, அல்லது ஒவ்வொரு மாவட்டத்தின் டாப் 10 தேவைகள் என்னென்ன, அதை நாங்கள் எப்படி நிறைவேற்றுவோம், அதற்கான திட்டங்கள் என்னென்ன  என்றெல்லாம் நேர்மறையாக  விளம்பரப்படுத்த முடியாதா? மக்கள் இதைதான் எதிர்பார்கிறார்கள். 

மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பை அன்புமணி சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறன். 'அன்புமணியாகிய நான்..' என்று அவர் கொடுத்த விளம்பரம் (ஏதோ பதவி ஏற்கும் தொனியில் இருந்தாலும்) நாட்டுக்கு தேவையான விஷயங்களை பேசுகிறது. மதுவிலக்கு, வேளாண்மை புரட்சி பற்றி பேசுகிறது. இது பாசிடிவ் அணுகுமுறை. இந்த அணுகுமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


Wednesday, February 17, 2016

அடுத்தது இலவச காற்று?


இப்போது தமிழக அரசு புதிதாக அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாக 20 லிட்டர் மினரல் வாட்டர் அளிக்கப்படுமாம். பணக்காரர்கள் எல்லாம் சுலபமாக காசு கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி விடுகிறார்களாம், அதனால் ஏழைக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறதாம் அரசு.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அதற்க்குதான் இந்த அரசாங்கம், குடிநீர் வாரியம், மாநகராட்சி எல்லாம் இருக்கிறது. பணக்காரனாய் இருக்கட்டும் ஏழையாக இருக்கட்டும்... குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. அதை சீரான முறையில் விநியோகிக்க லாயக்கில்லாத அரசு அதை பாட்டில்களில் அடைத்து இலவசம் என்று விநியோகிக்கிறது, அதுவும் ஸ்மார்ட் கார்டு மூலமாக... வெட்கக்கேடு...!

வீராணம் திட்டம் என்னவாயிற்று? கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என்னவாயிற்று? இவையெல்லாம் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது. மினரல் வாட்டர் கொடுப்பதன் மூலம் மாநகராட்சி குடிநீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத தண்ணீர் என்று அரசே சொல்கிறது. சென்னையில் இவ்வளவு வெள்ளம் வந்தும் அதையெல்லாம் சேமிக்கக எங்களுக்கு தகுதியில்லை என்கிறது.

அடுத்த அம்மா திட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்றே தெரியவில்லை... உங்களது சுவாசமே 'அம்மா'வாக இருக்க வேண்டும் என்று 'இலவச காற்று' திட்டம் எதாவது அறிவிப்பார்களோ?

Sunday, February 7, 2016

'கெத்து'க்காக ஒரு கூத்து



ஒருவழியாக 'கெத்து' என்பது தமிழ்தான் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. பல தரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, திருப்புகழ், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களை அலசி ஆய்வு செய்து இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'கெத்து' என்ற திரைப்படம் தமிழா இல்லையா என்பதை கண்டுபிடிபதற்காக  நடந்த கூத்து இது.

கடந்த தி.மு.க ஆட்சியில், தமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்ததால் வரிவிலக்கு என்று அறிவித்தார் கருணாநிதி. உடனே திரையுலகம் திரண்டுபோய் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சென்னை மாநகராட்சி, கடைகளின் பெயர் தமிழில் எழுதப்பட வேண்டும், பெயர் மட்டுமில்லாமல் அது என்ன கடை என்பதையும் தமிழில் இருக்க வேண்டும் என்று ஆணை பிறபித்தது. (அதாவது மெடிக்கல் ஷாப் என்பது மருந்தகம் என்றும் ஜெராக்ஸ் ஷாப் நகலகம் என்றும் இருக்க வேண்டும்). இல்லையென்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அதாவது தமிழ் தலைப்புக்காக ஒரு துறையினருக்கு மட்டும் சலுகை மற்றொரு துறையினருக்கு தண்டனை  என்ற விசித்திரமான கொள்கையை கடைபிடித்தது. தமிழில் பெயர் வைக்காவிட்டால் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட அந்த அரசுக்கு தைரியம் இல்லை.

சென்னையில் கடைகளில் பெயர்கள் அழகூட்டு நிலையம் (பியுட்டி பார்லர்), அடுமனை (பேக்கிரி),  நொறுவைகள் (ஸ்நாக்ஸ்) என்றல்லாம் மாறின, இதற்க்கு மாநகராட்சியும் பல யோசனைகளை சொன்னது. ஆனால் சினிமா பெயரில் பல குளறுபடிகள். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சினிமா தலைப்பாக இருந்தாலும் வரிவிலக்கு என்றது. இதன்படி 'நிக்காலோவ் ப்ரஷ்னொவொச்கி' என்று ஒரு தமிழ்ப்படம் வந்தாலும் வரிவிலக்கு  உண்டு. 'சந்தோஷ்' என்று ஒரு படம் இருந்தால் வரிவிலக்கு, 'சந்தோஷம்' என்றால் கிடையாது (சந்தோஷம் என்பது வடமொழிச் சொல்).

அடுத்தது அதிமுக ஆட்சி வந்தது. திமுக எதை செய்தாலும் அதை மாற்றவேண்டும் என்ற 'அம்மா அரசியல் சாசனத்தின்' படி தமிழ் பெயரோடு 'U' சர்டிபிகேட் வழங்கப்பட்ட திரைப்படங்களுக்குதான் வரிவிலக்கு என்றார் ஜெயலலிதா. கூடுதலாக, கதையின் கரு தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்,  வசனங்கள் தமிழில் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார். தமிழ் கலாச்சாரம் என்ன என்பதற்கெல்லாம் ஒரு வரையறையே கிடையாது. இதுவரை விலக்கு வாங்கிய எந்த படத்திலும் தமிழ் பண்பாடு இருக்கிறதா என்று ஆராய்ந்தது கிடையாது. 'டங்காமாரி ஊதாரி', 'ஆலுமா டோலுமா' படங்களும், டாஸ்மாக் காட்சிகள் இருக்கின்ற படங்களுக்கும் வரிவிலக்கு கிடைக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச வசங்கள் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் தமிழில் இருந்தால் சலுகை கிடைக்கும். இதுதான் சட்டம்.

இந்த நிலையில்தான் 'கெத்து' தமிழே இல்லை என்று அரசு கத்த, தயாரிப்பாளர்கள் கெத்தாக நீதிமன்றம் ஏற, இந்த வெத்து விஷயத்துக்காக அரசாங்க வக்கீல்கள் வாதாட, நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்ய, இந்த இத்துப்போன சமாச்சாரத்துக்கா இத்தனை கூத்து என மக்கள் பித்து பிடித்து போய் நின்றனர்.

Tuesday, February 2, 2016

படித்ததில் பிடித்தது

நண்பர் ஒருவர் 'வாட்ஸ்அப்' பில் பகிர்ந்து கொண்ட தகவல்.. படித்ததில் பிடித்தது...!
The marketing director of Nescafe manages to arrange a meeting with the Pope at the Vatican.
After receiving the papal blessing, the Nescafe official whispers, 'Your Eminence, I have some business to discuss. We at Nescafe have an offer for you. Nescafe is prepared to donate $100 million to the church . if you change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'."
The Pope looks outraged and thunders, "That is impossible. The Prayer is the word of the Lord, It must not be changed." Well," says the Nescafe man somewhat chastened, "We anticipated your reluctance.
For this reason, and the importance of the Lord's prayer to all Catholics, we will increase our offer to $300 million. All we require is that you change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'."Again, even more sternly, the Pope replies, "That, my son, is impossible. For the prayer is the word of the Lord and it must not be changed."
Finally, the Nescafe director says, "Your Holiness, we at Nescafe respect your adherence to your faith, we realise that tradition is essential to your beliefs, we fully understand the importance of the word of the Lord ............ ....but we do have one final offer.Please discuss it with your cardinals. We will donate $500 million to the great Catholic church if you would only change the Lord's Prayer from 'Give us this day our daily bread' to 'Give us this day our daily coffee'. Please, please consider it." And he leaves.

The next day the Pope convenes the College of Cardinals. "There is some Good news," he announces, "and some bad news .....
The good news is, he continues to a hushed assembly, ' that the Church will get $ 500 million."
"And what is the bad news, your Holiness?" asks a Cardinal.
"Sadly" says the Pope ,.
.
We would have to lose the Britannia Account