Thursday, November 13, 2008

வருங்கால வழக்கறிஞர்கள்..

சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த இந்த வன்முறை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வெளிவந்ததால் பரபரப்பானது. இவர்கள்தான் வருங்காலத்தில் சட்டத்தை மேம்படுத்தும் வக்கீல்களாகவும் நீதியை நிலை நாட்டும் நீதிபதிகளாகவும் வலம் வரப்போகிறவர்கள்..! சட்டத்தை கையில் எடுக்கும் இவர்களை நம்பித்தான் நாம் சட்டத்தை ஒப்படைக்கப்போகிறோம்..

கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாத மிருககுணம் இந்த மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சினிமாவின் பாதிப்பா அல்லது அரசியலின் பாதிப்பா?

ஆனால் நமக்கு இதெல்லாம் நகைச்சுவை காட்சிகள்தானே? திரையில் கவுண்டமணி செந்திலைப் போட்டு அடிக்கும்போதும் வடிவேலு தர்ம அடி வாங்கும்போதும் குடும்பத்தோடு பார்த்து கைதட்டி ரசித்தவர்கள்தானே நாம்..! இதையும் ரசித்துவிட்டுப்போவோமே..!

2 comments:

Vijay G S said...

Aaha.... romba nalla comparison !

Rishab Ravishwaran- Blogtime! said...

Sad to know about this... But this incident has bothered our community a lot. I dont think this was considered as comedy scene Instead most of the Indians took it very seriously. I hope we should all condemn these act.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்