Sunday, December 21, 2008

அபினவ் பிந்திராவும் துப்பாக்கியும்

ஒலிம்பிக்ஸ் தங்கம் வென்ற அபினவ் பிந்திராவையும் மும்பை தீவிரவாதத்தில் உயிரிழந்த கமாண்டோக்களையும் ஒப்பிட்டு ஒரு முட்டாள்தனமான மின்அஞ்சல் உலவிவருகிறது. இரண்டுபேரும் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்களாம். அனால் இந்திய அரசு பிந்திராவுக்கு 3 கோடியும் உயிரிழ்ந்த கமாண்டோவுக்கு வெறும் 5 லட்ச ரூபாயும் கொடுத்ததாம். 'என்ன தேசம் இது.. ' என்று விவரிக்கிறது அஞ்சல்.

இப்படி ஒரு சொடுக்கில் பலருக்கு மினஞ்சல்அனுப்புவார்கள் எவ்வளவுபேர் உயிரிழந்தவர்களுக்கான வீரவணக்க கூட்டங்களில் கலந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை..!

நாட்டுக்காக தியாகம் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் போதாது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.. பண உதவி மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் ஒவ்வொரு இந்தியனின் கடமை..

அனால் எதற்காக ஒரு விளையாட்டு வீரரை வம்புக்கு இழுக்கவேண்டும்? இதேபோல் கார்கில் போர் நடந்தபோது ராணுவத்தினரையும் சச்சின் டெண்டுல்கரையும் ஒப்பிட்டு ஒரு மினஞ்சல் உலவியது. இவையெல்லாம் நம் தெளிவான சிந்தனையை மழுங்கடிக்கக்கூடிய செய்திகள்.

ராணுவத்தினர் துப்பாக்கி வைத்திருப்பதால் துப்பாக்கிசுடும் வீரருடன் ஒப்பிடமுடியுமா? காலால் எட்டி உதைத்தால் கால்பந்து வீரருடன் ஒப்பிடுவார்களா? ஒரு ராணுவ வீரர் ஓடிப்போய் தீவிரவாதியைப் பிடித்ததால் பி.டிஉஷாவோடு ஒப்பிடுவர்களா?

இருவேறு துறைகளில் இருப்பவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும்? அப்படியென்றால் சினிமாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை தமிழ் டயலாக் பேசியே திருத்தும் கேப்டன்களையும், பத்து அடியாட்களை ஒரே சமயத்தில் புரட்டி எடுக்கும் சூப்பர் ஸ்டார்களையும் ஏன் இந்த நிஜ ஹீரோக்களோடு ஒப்பிடக்கூடாது? (இந்த நிழல் ஹீரோக்கள் நிஜ ஹீரோக்களிவிட, விளையாட்டு வீரர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்)

விளையாட்டு வீரர்களும் ராணுவ வீரர்களும் நம் நாட்டுக்கு வெற்றியை தேடித் தருகிறார்கள்.. நம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்ள வைகிறார்கள்.. பணத்தின் அடிப்படையில் அவர்களை ஒப்பிடுவது மாபெரும் தவறு. இந்த நியதி எல்லா நாட்டிற்கும் பொருந்தும். உலகில் எந்த நாட்டிலும் ராணுவத்தினர் விளையாட்டு வீரர்களைவிட அதிகம் சம்பாதிப்பது இல்லை.

உங்களிடம்
மினஞ்சல் வசதியிருந்தால் உயிரிழ்ந்த கமாண்டோக்களுக்கு அதிக உதவி செய்ய அரசை வற்புறுத்துங்கள்.. ராணுவ பட்ஜெட்டில் இதற்காக அதிக நிதி ஒதுக்க சொலுங்கள். தேவையில்மால் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிகொடுத்த அபினவ் பிந்திராவின் தலையை போட்டு உருட்டாதீர்கள்...!

இதுபோல வெட்டி செய்திகளால் உயிரிழந்தவர்களுக்கும் உபயோகமில்லை..! பிந்திராவுக்கும் நிம்மதியில்லை..!

2 comments:

Anonymous said...

Hello Ravi, this is Sangeetha Sathish (Aruna's colleague): Well absolutely thought provoking write-up. When these mails were floating, I too had a feeling that this will dampen the spirits of sportsmen across India and perhaps the World too. The news which I had read in CT today exasperated me a great deal, it was about fake mails inviting people to contribute money for helping the victims of Mumbai terror attack. Some have fallen as a victim to these while the others decided to investigate a little before they darted to pitch in money and were saved from the artful deal!!!!!!

Well I felt aghast at the extent people could exploit any situation to their advantage. Anyways let’s salute both the warriors who saved Mumbai from worst havoc as well as the sportsmen who made the Country proud by their Laurels.

Anonymous said...

Thanks for your comments Sangeetha..!

Those who send these mails do not know they are spearding a cloudy thoughts among public..!

Post a Comment

உங்கள் கருத்துக்கள்