Sunday, September 9, 2012

டப்ளின் சங்கமம்


நம்ம ஊர் சென்னை சங்கமம் போலவே டப்ளினில் 'திருவிழா.. எங்க தெரு விழா' நடக்கிறது. பல்வேறு பூங்காக்களில் தெருக்களில் நடக்கும் இந்த 'டப்ளின் சங்கமத்துக்கு' கூட்டம் அலை மோதுகிறது. ஒருமாத காலம் அயர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில்  கூடியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். 

ஒரு பூங்காவில் கழைகூத்தாடி நிகழ்ச்சி, தொடர்ந்து பாட்டு நடனம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. பூங்காவை சுற்றி பல பல கடைகள் - பல துரித உணவுகள், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம்.. அதை சுற்றியுள்ள தெருவில் போக்குவரத்துக்கு தடை செய்பட்டு சிறுவர்களுக்கான பல விளையாடுக்கள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிகழ்சிகள் பல ஆண்டுகளாக கோடையின்போது நடக்குமாம். 'பல ஆண்டுகளாக' என்று சொல்லும்போதே அரசியல் கலக்காமல், ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்படாமல், மக்களை மட்டும் மனதில் வைத்து நடைபெற்றுவருகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. 









No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்