Monday, July 9, 2012

அவிழும் பிரபஞ்ச ரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் துவக்க புள்ளிதான் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு பிரம்மாண்ட ரகசியம். மனிதனின் அறிவியல் அறிவு வளரவளர அவன் தன் தோற்றத்தின் ரகசியம், தனக்கு முன் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் இந்த பூமியின் அமைப்பு, சூரியனின் பிறப்பு, பால்வீதி மண்டலம் உருவானது, அதற்கெல்லாம் முன்னதாக ஒரு மகா வெடிப்பின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது வரை எல்லாம் கண்டறிந்துவிட்டான். அனால் அந்த மகா வெடிப்பின் காரணம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க படாமலே இருந்தது. அங்கேதான் கடவுள் இருக்கிறார்.. அங்கேதான் கடவுளின் படைப்பு துவங்குகிறது என்று எல்லா மதங்களும் சொல்லி வந்தன.

இந்த மகா வெடிப்பு நிகழ்ந்தது 13 .75 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.. அங்கிருந்துதான் பிரபஞ்ச சரித்திரம் துவங்குகிறது.... அதற்க்கு முன் எந்த சரித்திரத்துக்கும் வாய்ப்பு இல்லை. பல அணுத்துகள்களின் ஒட்டுதல்-உரசுதல் காரணமாக நடந்த அந்த மகாவெடிப்பின் பயனால் பல நட்சத்திர மண்டலங்கள் உருவாகி அவற்றிலிருந்து பல நட்சத்திரங்கள், அதிலிருந்து கோள்கள், துணை கோள்கள் என்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வெடிப்புக்கு உறுதுணையாக இருந்த முக்கியமாக இருந்த ஒரு அணுத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அணுத்துகள் இப்படிப்பட்ட தன்மைதான் கொண்டிருக்கும் என்று பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1964 ல் கூறியதால் அவர் பெயரையே அதற்கு வைத்து ஹிக்ஸ் துகள் என்றார்கள். இதைப்பற்றி யாருக்கும் ஒன்றும் புரியாததால் பின் 'சரி இது ஏதோ கடவுளின் செயல் போலிருக்கிறது என்று நினைத்து 'கடவுள் துகள்' என்று நாமகரணம் சூட்டிவிட்டார்கள்.

இன்று அந்த ரகசியமும் அவிழ்ந்து விட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (CERN ) ஒரு செயற்கை மகாவெடிப்பை நிகழ்த்தி ஆய்வுசெய்து கடவுள் துகள் தன்மையை ஒத்த ஒரு அணுத்துகளை கண்டுபிடித்து விட்டார்கள். படைப்பின் மூலம் அறியப்பட்டு விட்டது. இனி இதுதான் கடவுள் துகளா என்று ஆராயவேண்டும்.. இது ஒரு ஆரம்பம்தான், இன்னும் கண்டறியவேண்டியது நிறைய இருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு முன்னால் எதாவது இருந்ததா அல்லது இதைபோல் வேறு பிரபஞ்சகள் உண்ட என்ற கேள்விகள் விஞ்ஞானிகளின் மூளையை குடைந்துகொண்டே இருக்கும்..!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்