Sunday, August 16, 2009

என் சுதந்திரம்

காலை பத்துமணி விழித்து..

இந்திய
தொலைக்காட்சியில்
முதல்முறையாக வெளியாகும்
அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து..

காந்தி கொள்கைகளில்
குறையாடை மட்டும் கடைபிடிக்கும்
கவர்ச்சி நடிகைகளின் பேட்டி ரசித்து..

வெட்டுகுத்து நாயகர்களின்
அஹிம்சை விளக்கம் கேட்டு..

இரட்டைஅர்த்த
நகைச்சுவையை
குடும்பத்துடன் சிரித்து..

தமிழ்
கொல்லும் தொகுப்பாளினிகளின்
காந்தி விளக்கத்தில் மெய்மறந்து..

காந்தி
-கோட்சேவில் சிறந்தவர் யாரென்ற
பட்டிமன்ற தத்துவத்தில் மூழ்கி..

ஏதேனும்
கலவரம் உண்டாவென
செய்திசேனல்களில் அக்கறையுடன் பார்த்து..

சுகமாகக் கழிந்ததென் சுதந்திரதினம்...!

2 comments:

Anonymous said...

nalla irukku sir indha satire... best wishes raja.

Vijay G S said...

The best from you so far !

Post a Comment

உங்கள் கருத்துக்கள்