
நம்பிக்கை உனக்குள் நங்கூரம் போடும்..!
வாழ்க்கை என்பது உன் வசமாகும்..!
வாழ்ந்துப்பார்த்தால் உண்மை புரியும்..!
மனம்தான் உந்தன் கடவுள் என
நம்பிக்கை விதையை ஊன்று விடு..!
மனிதனின் மனமே தெய்வீகம் என
நாளைய உலகிற்க்குக் காட்டிவிடு..!
பூமிக்குக் காலங்கள் போல்
வாழ்க்கைக்கும் காலங்கள் உள்ளதன்றோ.. !
இலையுதிர் காலங்கள் மாறும் அன்றோ..!
வசந்தங்கள் உன்கண்ணில் தெரியுமன்றோ..!
முயற்சி என்பது பலமுறைதான் - அதில்
சந்தர்ப்பம் என்பது ஒரு முறைதான்..!
சாமர்த்தியம் உந்தன் வழிமுறைதான் - அதை
நழுவவிட்டால் பின் கல்லறைதான்..!