Sunday, October 5, 2008

கண்ணதாசன் பற்றி...

நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். அன்று மதியம் தமிழ் வகுப்பு. தமிழாசிரியர் சோகமுகத்துடன் உள்ளே நுழைந்தார்.
கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வருகிறது.. பார்க்க விரும்புபவர்கள் பார்த்து விட்டு வரலாம் என்றார்.

அவர் சொன்னதுதான் தாமதம்.. தி.நகர் பர்கிட் ரோடில் உள்ள எங்கள் பள்ளியிலிருந்து ஓடிவந்து தி.நகர் பேரூந்து நிலையைத்தை அடைந்தோம்.

அதோ கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது..

முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னால் நடந்து வந்துகொண்டிருக்க பல திரையுலகப் பிரமுகர்கள் அவரை அமைதியாக பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தர்கள். பின்னால் ஒரு வண்டியில் சாய்ந்த கண்ணாடிப்பேழையில் தமிழ் நெஞ்சங்களை தன் வசீகர வார்த்தைகளால் கொள்ளை கொண்ட அந்தக் கவிஞன் கண்ணயர்த்து உறங்கிக்கொண்டிருந்தான்..

மனதுக்கினிய அந்த கவிஞனை முதன்முதலில் அந்த நிலையில்தான் பார்த்தேன்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்