Monday, September 15, 2008

சிவாஜி நினைவுகள்..

அது 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு மாலைப் பொழுது...

தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. தமிழர்களில் இதயங்களில் ஒரு நாற்காலியை போட்டுக்கொண்டு நிரந்தரமாக உட்காந்திருக்கும் அந்த நடிகர் திலகத்தின் வாழ்கையிலும் மரணம் என்ற சம்பவம் நிகழுமா? சிவாஜி என்ற மாமனிதனுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?

கலங்கின கண்கள்.. துடித்தது நெஞ்சு.. கண்ணீர் கவிதையாக மாறியது...

சிவாஜி மரணம்...

அறிவு ஏற்கிறது..
உணர்வு மறுக்கிறது..

தமிழ் சினிமாவின்
செல்லுலாய்ட் சிங்கம் தன்
சீற்றத்தை முடித்துக்கொண்டது...

அரை நூற்றாண்டு
தமிழனின்
பொழுதுபோக்கு
மறைந்து போனது..!

ஐம்பத்து வருட
வெள்ளித்திரை
வீரன்
விடைபெற்றான்..!

சிவாஜி..
எங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்தாய்..!

பாத்திரமாக நீ மாறினாய்.. அதை
வாழ்கையில் நடித்தது நாங்கள்...!
கண்ணாடிப் பேழையில்
நடிக்காத வேடத்தில் நீ ..
உண்மையாக அழுதது நாங்கள்...!

முன்னுறு படங்களில்
மொத்த வாழ்கையை முடித்த நீ
மரணத்தால் மரிக்கவில்லை..!

பராசக்தியில் தொடங்கிய பயணம்
படையப்பாவரை பத்திரமாக
பாதுகாக்கப்படும்..!

தொலைகாட்சியில்
நாளுக்கு பத்து
படங்கள்..
அதில் நாலைந்து நீ..

வானொலியில்
பலர் விரும்பும் பாடல்கள்..
அதில் பெரும்பான்மை நீ..

ஞாயிறு மாலை..
கையிலே தேநீர்..
சின்னத்திரையில் சிவாஜி..
சுகமான அனுபவம்..

தமிழனின் கேளிக்கை
காலாவதியாகும் வரை இந்த
மூன்றெழுத்துச் சொல்
முணுமுணுக்கப்படும்..!


1 comment:

Vijay G S said...

Very Nice... What abt Kunnakudi?

Post a Comment

உங்கள் கருத்துக்கள்