Sunday, June 29, 2008

தெருவோரம்...

1

அந்த நடைபாதை பிச்சைக்காரனின்

மூச்சு நின்றவுடன்

அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்

இடம் கிடைத்தது...!

2

கால்கள் கட்டப்பட்டு

தலைகீழாக தொங்கவிடப்பட்டு

மிதிவண்டியின் கைப்பிடியில்

பயணிக்கும்

கோழிகள் அறியாது

தன் இறுதிப்பயணத்தை...!

3

இந்த வாய்க்கரிசிமட்டும்

நேற்று கிடைத்திருந்தால்

பட்டினிச்சாவை

ஓரிருநாள்

தள்ளிப்போட்டிருக்கலாம்...!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்